ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
வரி வருமானத்தை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் திரட்டவேண்டிய வரியை அறவிடுதல் உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இலக்குகளை அடைவதற்காக நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய E-Invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதாகவும், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளதாகவும்ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.









