கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ம் திகதி இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது.
அதனையடுத்து அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.









