கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தேசபந்து தென்னகோனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டதரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்









