மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி London Hilton-ல் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது தமிழ் பெண்களை கொண்டாடும் வகையிலும் , அவர்களது நம்பிக்கையை மேம்படுத்தி திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய வகையிலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
“வலுவூட்டப்பட்ட பெண் ஏனையவர்களை வலுவூட்டுகிறார்” எனும் தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வானது இடம்பெறவுள்ளது.
அதற்கமைய தமிழ் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தவும் கலாச்சார பெருமையை உணர்த்தவும் திறமைகளை வெளிக்கொணரவும் ஓர் களமாக இந்த அழகிப்போட்டி மேடை அமைந்துள்ளது.
இதேவேளை இப்போட்டியினூடாக பல்வேறு தரப்பினரை ஊக்குவிக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் பொருளாதார ரீதியில் சவால்களை சந்திக்கும் பெண்களுக்கு உதவிசெய்தல், துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி ரீதியாகவோ அல்லது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஜீவனோபாய வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் , பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவி பொறிமுறையை உருவாக்குதல் போன்ற பொறிமுறைகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.









