யாழ்ப்பாணத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சலால் இதுவரை சிலர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மர்ம காய்ச்சலொன்று பரவி வரும் நிலையில் அது எலிக் காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலையை அடுத்து பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக காய்ச்கல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசிதல் போன்றன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
இதுபோன்று அறிகுறிகள் காணப்பட்டால் அதற்கான தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.









