2026 கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டவகையில் நடைபெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு தயாராவதற்கு பரீட்சார்த்திகளுக்கு போதுமான காலஅவகாசம் உள்ளதாகவும், எந்தவகையிலும் பரீட்சைகளை பிற்போடுவதற்கான தேவை இல்லையெனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி 2026ம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், அதே திகதியில் பரீட்சைகள் ஆரம்பமாகுமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது
. பாடசாலை ரீதியிலான பரீட்சார்த்திகள் மற்றும் 2ம் மற்றும் 3ம் தடவை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்காக தயாராவதற்கு உரிய கால அவகாசம் காணப்படுவதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.







