இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலுவிற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்துஇ சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டில் பலு நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக 4இ000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








