நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை,பதுளை ஆகிய பகுதிகளுக்கும்,
குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேசத்திலும்,
மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை மற்றும் ரத்தோட்டை பிரதேசங்களுக்கும்,
மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர,பிபில பிரதேசங்களுக்கும்
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேசத்திற்கும்
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அத்தியட்சகர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்கள் ஏற்பட்டால் அல்லது ஏற்படும் அபாயம் நிலவினால் பிரதேச கிராம சேவகர்,பிரதேச செயலாளர் அல்லது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதேச செலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலைப்பாங்கான பகுதிகளிலுள்ள வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அத்தியட்சகர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.









