முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான விஜேராம மாவத்தையிலுள்ள இல்லத்திலிருந்து இன்று வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த ஏனைய சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுஇ சபாநாயகரினால் சான்றுப்படுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தஇ நீண்ட காலமாக விஜேராம இல்லத்தில் தங்கியிருந்தார்.
கொழும்பின் மிகவும் பாதுகாப்பான மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் குறித்த இல்லம் அமைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (ஊஐனு) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.









