ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ம் திகதி வரை கூட்டத்தொடர் நடைபெறும்.
இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இலங்கை தூதுக்குழுவினர் ஜெனீவாவில் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையுமென இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.









