பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் ஷல்மான்கான் இணைந்து நடிக்கும் திரைப்படம் எப்போது வெளியாகுமென பலரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அது சினிமா ரசிகர்களின் பல ஆண்டுகால கனவாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் பேட்டியொன்றில் மூன்று கான்களும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் அமீர்கான் கருத்து வெளியிட்டுள்ளார்,
‘நாங்கள் மூவரும் இணைந்து நடிப்பதற்கான கதையை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. ஒருவேளை அப்படி ஒரு படம் அமைந்தால்இ அந்தப் படத்தின் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டிஇ எங்கள் மூவருக்கும் அது மிக சந்தோஷமான ஒரு அனுபவமாக அமையும் என்பது மட்டும் உறுதி’ என குறிப்பிட்டுள்ளார்.









