அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் எதிர்வரும் 20 ம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அன்றுமுதல் ஆசனப்பட்டி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுமென தேசிய வீதி அதிகார சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 19ம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவடைகிறது.
அதற்கமைய, எதிர்ரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.








