மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை அமெரிக்காவில் தங்கவுள்ளனர்.
அதற்கான அனைத்து ஒழுங்குகளும் திட்டமிட்டபடி நடைபெறுமென பெக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்புக்கமைய அவர்களது விஜயம் அமைகிறது.
ஐக்கிய இராச்சியத்துக்கும் , அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகளையும், நவீன இருதரப்பு உறவையும் கொண்டாடும் வகையிலும், அமெரிக்க சுதந்திர தினத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.









