கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனவும், பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாதெனவும் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்தத சம்பவம் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்நர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளைஇ சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்கவுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்..
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும்
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனவும்,பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாதெனவும், எவரேனும் சட்டவிரோதமாக செயல்பட்டால், அவர்களைச் சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடுமெனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்..









