மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கடவத்த இடைமாறல் மத்திய நிலையம் மற்றும் அதிவேக வீதியின் முதலாவது 500 மீற்றர் பகுதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்திற்கென 8.6 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் குறித்த வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட கடன் கைவிடப்பட்டமையினால் , 2022ம் ஆண்டின் மத்திய பகுதியில் குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் தற்போது சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கியினூடாக கிடைக்கப்பெறும் 500 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவியின் கீழ் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடவத்த முதல் மீரிகம வரை 37 கிலோ மீற்றர் நீளமான குறித்த பகுதியின் நிர்மாணப்பணிகளை 2028ம் ஆண்டளவில் பூர்த்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.









