நவீன வசதிகளுடன் கூடிய புதிய 100 தாழ்தள பஸ்களை கொள்வனவு செய்யவுள்ளதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அசௌகரியமற்ற வகையிலும் தாழ்தள பஸ்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாட்டின் முக்கிய நகர்பகுதிகளில் பொதுப்போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் தாழ்தள பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் காலத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து சேவையை மாற்றியமைப்பதனூடாக மக்களிடையே பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க முடியும்.
இதனூடாக போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும். அதற்கமைய தாழ்தள பஸ்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள தரப்பினர் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.
மேலதிக விடயங்களை அமைச்சின் http://www.transport.gov.lk உத்தியோகபூர்வ தளத்தினூடாக அல்லது 0112-187213 எனும் இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.









