புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் புனரமைப்பு நடவடிக்கை இன்றைய தினம் (15) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
1964 ம் ஆண்டு புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் இலங்கை போக்குவரத்து சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் சுமார் 60 ஆண்டுகளின் பின்னர், முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது. 424 மில்லியன் ரூபா செலவில் அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பாடல் நிலையம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பிரிவுகள் மத்திய பஸ் தரிப்பிடத்தில் நிர்மாணிக்கபடுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை நிர்மாணப்பணிகளுக்கான பொறியியல் பங்களிப்பை வழங்கவுள்ளது.
இதேவேளை க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
புகையிரத நிலையத்தின் பழமைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.









