கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய வளாகம் எதிர்வரும் 11ம் திகதி முதல் மூடப்படவுள்ளது. புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும்வரை போதிராஜ மாவத்தை , குணசிங்கபுர மாவத்தை மற்றும் பெஸ்தியன் மாவத்தை ஆகிய பகுதிகளிலிருந்து பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.









