நேபாளத்தில் மக்கள் போராட்டம் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டையும் தாண்டியுள்ளது.
அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் நேபாள பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தீ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே அந்நாட்டின் நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், முக்கிய அரசியல்வாதிகள் வீடுகள் என்பவற்றையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே நேபாள பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அவரது ராஜினாமா ஜனாதிபதி பவ்டெல் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.









