ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய செய்தி
ஆப்கானிஸ்தானில் நேற்றை தினம் (31) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகமென ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவானநிலையில் அதனை தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அதிர்வுகள் 4.5 மற்றும் 5.2 மெக்னிடியூட் அளவுகளில் பதிவாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் இந்திய மற்றும் யூரேசிய நிலக்கீழ் தகடுகளுக்கு இடையிலானபகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், தொடர்ச்சியாக நிலஅதிர்வுகள் ஆப்கானிஸ்தானில் ஏற்படுகின்றன.









