ஈரானுக்கெதிரான தாக்குதல் தீவிரமடையுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபின் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்த தான் விரும்பவில்லையெனவும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் தெஹ்ரான் கப்பல்களை தொடர்ந்து தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின் குணடுத்தாக்குதல் பல மடங்குகளாக அதிகரிக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









