இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவுஸ்திரேயாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
3 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், 2ம் கட்டமாக அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், அங்கு பெருமளவில் திரண்டிருந்த அவுஸ்திரேலிய வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலிய பிரதமர் எந்தனி அல்பனிசுடன் இந்திய பிரதமர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









