நாட்டில் சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (ஊஐனு) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான விசாரணைகள் நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமூகத்தின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டுஇ இது போன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து தகவலறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.








