மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது.
இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக தபாலகம் அமைக்கப்பட்டு அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.









