மனிதர்களுக்கென விசேட குளிர்சாதனப்பெட்டியை ஜப்பான் தயாரித்துள்ளது. கடும் கோடையிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கென இந்த ப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.
குளிர்பான வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு மனிதன் அமர்ந்திருக்கும் அளவில் பெட்டி வடிவில் இந்த ப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியின் உட்புற வெப்பநிலை எப்போதும் 15 செல்சியஸ் (59 டிகிரி) ஆக பராமரிக்கப்படும். தனிநபர் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்ததும், 5 செல்சியஸ் (41 டிகிரி) குளிர்ந்த காற்று நேரடியாக தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வெறும் 5 நிமிடங்களில் உடலில் உள்ள வெப்பம் தணிந்து, 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் இந்த ப்ரிட்ஜ் தயாரிக்கப்பட்டுள்ளது.
உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். இதற்கு சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரம் தேவைப்படுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.








