கொங்கோ மற்றும் உகண்டாவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது.
நோய் தொற்று பரவல் ஆரம்பித்து முதல் மாதத்திலேயே 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ , சிகிச்சைகளோ இல்லாததால் இந்நோய் பரவல் அதிக அளவில் தீவிரமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை 894 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 வரை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றானது, 2000ம் ஆண்டு நோய்ப்பரவலை விட மூன்று மடங்கு மோசமானதென ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.









