தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி பின்னதுவ நுழைவாயிலின் பாதுகாப்புப் பக்க வாயிலையும் உடைத்துக் கொண்டு சென்று அருகிலிருந்த தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இணைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









