தலவத்துகொட நகர பகுதியில் அமைந்துள்ள ஹொட்டெல் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹொட்டெலின் சமையலறைப் பகுதியில் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் , பிரதேச வாசிகள் இணைந்து கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஹொட்டெலின் உட்புறத்தில் சிக்குண்டிருந்த மூவரை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தலங்கம பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









