பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 4 வருடங்களுக்கு அவர் பங்கயாதேஸ் கிரிக்கட் சபையின் தலைவராக செயற்படவுள்ளார்.
37 வயதான தமீம் இக்பால் நேற்றைய தினம் பங்களாதேஸ் கிரிக்கட் சபை தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பங்களாதேஸ் கிரிக்கட்டின் தற்காலிக தலைவராக தமீம் இக்பால் செயற்பட்டுவந்த நிலையில், தற்போது எதிர்வரும் 4 வருடங்களுக்கு தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்டுள்ள அவர், பங்களாதேஸ் அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராகவும் காணப்படுகின்றார். இளம் தலைவர் ஒருவர் பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் தலைவராக தெரிவாகியுள்ளமை பங்களாதேஸ் கிரிக்கட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
2007ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்களாதேஸ் கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள அவர் , 70 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









