பிலிப்பைன்சில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அருகில் நிலஅதிர்வு பதிவாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அனர்தத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 129 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் பதிவாகியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டைய நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.









