கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்றிரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.







