நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பாடசாலை மாணவன் ஒருவனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த , பாடசாலை மாணவன் மற்றும் இரண்டு பெண்களே என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








