அங்குருவாதொட, பட்டகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 11 எனவும், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் போது காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த முதியோர் இல்லத்திலிருந்த சுமார் 51 பேர் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுஇ தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









