இந்திய–இலங்கை நட்புறவின் அடிப்படையில் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 134 சிங்கல் கெப் வாகனங்களை இந்தியா அரசாங்கம் வழங்கியுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்திய அரசாங்கம் அன்பளிப்பு செய்த வாகனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
300 மில்லியன் ரூபா பெறுமதியான கெப்ரக வாகனங்கள் , வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் வழங்கிய அன்பளிப்பை பாராட்டி,பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஆகியோரும், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.









