நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக ரூ. 265.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









