நேபாளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள ஜல்ஜாலா மலைப்பகுதியின்
3 ஆயிரம் அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. குறித்த ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 700 மீட்டர் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் ஜீப்பில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









