பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை விரைவில் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கத்தின் தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கட்டணங்களை மாற்றியமைப்பது அவசியமாகியுள்ளது.
எனினும், இந்த அதிகரிப்பை நியாயமான முறையில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கட்டண உயர்வு தொடர்பாகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
இந்த அதிகரிப்பு சதவீத அடிப்படையில் அன்றி, ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும், பெற்றோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வழங்குநர்கள் கட்டணங்களை உயர்த்தாமல் தவிர்த்து வந்ததாக டி சில்வா சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் பழைய கட்டணத்திலேயே சேவையைத் தொடர்வது கடினமாகிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.









