ஈரானிய இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிடடுள்ளன.
ஈரானின் ஆளில்லா ட்ரோன் விமானங்களையும் அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காடந்த மூன்று மாதங்களாகத் தொடரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே புதிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளை ஈரானும் ஓமானும் கூட்டாக நிர்வகிக்குமென ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நிராகரித்தார்.
ஹோர்முஸ் நீரிணை கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்குமெனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.









