ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹொக்கைடோவின் தெற்குப் பகுதியில் உள்ள சரபெட்சு நகரத்திற்கு மேற்கே 83 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படயெல்லை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே நிலஅதிர்வால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் தொடர்பில் சரியான தகவல்களை வெளியிடப்படவில்லை.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஜப்பானின் இவாத்தே மாகாணத்திற்கு அண்மையில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து அந்நாட்டு தொடர்ந்தும் நிலஅதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









