இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் விஜயத்தில் இணைந்துள்ளனர்.
இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ‘INDIA – 01’ ரக விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் , விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளால் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதிநிதிகள் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.









