சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளுக்காக இன்று (15) முதல் பஸ்கள் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சகல மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் அதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார்.
இதேவைளை இன்றறைய தினம் ஒரு சாதாரண அலுவலக தினம் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.









