பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷஹீன் ஷா அப்ரிடி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றவரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.
ரிஸ்வான் மற்றும் ஷகீன் ஷா அப்ரிடி ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டியில் ஒன்றாக விளையாடி வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிஸ்வானை மாற்றுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் வெள்ளை பந்து தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸனுடன், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த முடிவு எட்டப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஷஹீன் ஷா அப்ரிடி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அணியை வழிநடத்துவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.









