பொது சுகாதார சேவைகளை நன்கொடைகள் மூலம் வலுப்படுத்துவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய பங்களிப்புக்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கெபத்திகொல்லாவ வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்காக Dialysis machine , RO plant உட்பட 39 வைத்திய உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பங்களிப்புகள் நோயாளிகளுக்கு நேரடியாக பயனளிக்கும்மென சுட்டிக்காட்டிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ , அனைவரும் எதிர்கட்சி தலைவரை போன்று பங்களிப்பு வழங்கவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.









