நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36 ஆயிரத்து 178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 630 வெற்றிடங்களும் , தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 513 வெற்றிடங்களும் , மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 318 வெற்றிடங்களும் , வடமேற்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 990 வெற்றிடங்களும் , ஊவா மாகாணத்தில் 2 ஆயிரத்து 780 வெற்றிடங்களும் , வடமத்திய மாகாணத்தில் ஆயிரத்து 568 வெற்றிடங்களும் , கிழக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 613வெற்றிடங்களும் , சபரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 994 வெற்றிடங்களும் வட மாகாணத்தில் 3 ஆயிரத்து 271 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சேவை தரம் 3 (பி) 1 க்காக 353 பட்டதாரிகளை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.









