அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.
செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகையே நாளையதினம் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைவாக ஒதுக்கப்பட்ட11இ201இ647இ 000.00 ரூபா தொகை, சுமார் 1இ 412இ 574 பயனாளி குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
குறித்த பணம் உரியவர்களின் சேமிப்புக் கணக்குகளில் வைப்பிலிடப்படும். நாளை 12ம் திகதி முதல் பயனாளிகள் நலன்புரி உதவித் தொகையை பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.









