ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளன.
8 அணிகள் பங்கேற்கும் போட்டித்தொடரானது, எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
போட்டிகளில் ஏ பிரிவில் இந்தியா ,பாகிஸ்தான் , ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் ஓமான் அணிகளும் , பி பிரிவில் பங்களாதேஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
டுபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
செப்டம்பர் 20 முதல் 26 ம் திகதி வரை சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
இறுதிப்போட்டி 28ம் திகதி நடைபெறவுள்ளது.








