சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 18 ம் திகதி திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ச்சியாக 20 தினங்கள் மகோற்சவம் இடம்பெற்று இன்று தீர்த்தோற்சவத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.









