20 கிலோ 900 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதன் பெறுமதி 200 மில்லியன் ரூபாவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கிராண்பாஸ் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யதுள்ளனர்.
எனினும் போதைப்பொருளுடன் காணப்பட்ட அவரது பயணப் பொதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டநிலையில்
சந்தேகநபர் தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தெரியவந்துள்ளது.









