எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.









