எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, சபை ஊழியர்கள் 12 பேர், இரு சிறுவர்கள் மற்றும் பஸ்சின் சாரதி உட்பட 15 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.
தங்காலை பகுதியில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த பஸ், எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி 500 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கைகால்களை இழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 8 பேர் சிறுவர்கள் என்றும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்இ இலங்கை விமானப்படை தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு ஆஐ-17 ஹெலிகாப்டரையும்இ வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 ஹெலிகாப்டரையும் நிறுத்தியுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் நோயாளிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல அல்லது தேவைக்கேற்ப கூடுதல் மீட்பு உதவியை வழங்க தயாராக உள்ளன.









